மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Thursday, September 23, 2010

காலச்சுவடுகள் . . .

பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,

எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,

முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,

எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,

மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,

காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .

நன்றி, வார்ப்பு.

6 comments:

  1. உண்மை தான் நண்பா ....
    இன்று சுனைனா ,நேற்று ஷோபனா,காலசுவட்டில் நாளை யாரோ ...
    ரொம்ப அருமையான கவிதை நண்பா....

    ReplyDelete
  2. நன்றி நண்பரே,

    //நாளை யாரோ ...//

    அந்த அதிர்ஷ்டம் யாருக்கென்று காலச்சுவட்டில் பதியாமலா போய்விடும் ?

    ReplyDelete
  3. //வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது//

    கவிதை வரிகள் அருமை. ரசித்தேன். நன்றி.


    க. சுரேந்திரன்
    அகம் புறம்.

    ReplyDelete
  4. ///இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது///


    அட நல்லா இருக்கே.... கவிதையை தாங்க சொன்னேன்...

    ReplyDelete
  5. //வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    கவிதை வரிகள் அருமை. ரசித்தேன். நன்றி.


    க. சுரேந்திரன்
    அகம் புறம். //

    நம்பிவிட்டேன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

    ReplyDelete
  6. ///இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


    அட நல்லா இருக்கே.... கவிதையை தாங்க சொன்னேன்... ///

    நம்பிட்டேங்க, மொத தடவ வந்துர்க்கீங்க, படிச்சிர்க்கீங்க, கருத்து சொல்லீர்க்கீங்க, நெம்ப நன்றிங்க

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது