மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Thursday, April 7, 2011

ஸௌராஷ்ட்ர மொழி கற்க

ஸௌராஷ்டிரா . . . ,

இச்சொல்லை பலர் அறிந்திருந்தாலும், அதன் முழு விவரம் பலருக்கு தெரிவதில்லை,

ஸௌராஷ்டிரா  என்பது பண்டைய காலத்தில் இருந்த பாரத வட மேற்கு பகுதியில் இருந்து (தற்போதைய குஜராத்) புலம் பெயர்ந்து, தமிழ்நாட்டில் பெருவாரியாகவும், இன்று உலகெங்கும் இருக்கும் ஒரு சமூகத்தினரை குறிக்கும் சொல்.

பல்வேறு தொழில்களை நுணுக்கம் பெற்றிருந்தாலும், நெசவுத் தொழிலில் உள்ள தனித் தன்மையினால், பட்டுநூல்காரர் என்று அழைக்கப்படுகிறார்கள்,

ஸௌராஷ்ட்ர தேசத்தை பிரிந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலானாலும், ஸௌராஷ்ட்ர மொழியை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறாகள்.

வாழ்வாதாரத்திர்க்காக பிராந்திய மொழிகளைக் கற்க வேண்டிய அவசியம் இருந்ததால், பல்வேறு பிராந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், இண்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றனர்,

அதே நேரத்தில், தங்களின் தாய் மொழியான ஸௌராஷ்டிரத்தில் போதிய தேர்ச்சி இல்லை, ஏனெனில் அதற்க்கான வாய்ப்புகள் இல்லை.

ஆனால், இன்றைய இணைய வளர்ச்சி மூலம், ஸௌராஷ்ட்ர ஒருங்குறி (Unicode) அமைக்கப்பட்டு, இணையத்திலும், மின்னஞ்சலிலும் ஸௌராஷ்ட்ர மொழியில் எழுதுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலருடைய விருப்பம் யாதெனில், பெருவாரியான இணைய பயனரகளுக்காகவாவது ஸௌராஷ்ட்ர மொழி இணைய வழியில் கற்பதற்கு ஒரு வலைத்தளம் வேண்டும் என்பதே,

கடந்த மூன்று மாத இடைவிடா சோதனைகளுக்கு பிறகு ஸௌராஷ்ட்ர மொழி கற்க ஒரு வலைத்தளம் செயல்படுத்தப் பட்டுள்ளது,

இணைய தளத்திற்கு செல்லும் முன்,

தயவுசெய்து,

௧. ஸௌராஷ்டிரா (sourashtra) எழுத்துருவி (unicode) வடிவத்தை (font) இங்கிருந்து தரவிறக்கம் (download) செய்து நிர்மாணித்துக் (install) கொள்ளவும்,

௨. பிறகு, இதே வலைப் பக்கத்தை, நெருப்பு ஓநாய் (Fire Fox) இணையப் பார்வையில் நோக்கவும்,

மேற்சொன்ன ஆயத்தங்கள் செய்ததற்கு மிக்க நன்றி,

ஸௌராஷ்ட்ர மொழி கற்க உங்களை பின்வரும் வலைத்தளத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்,

வருக ! வருக ! ஸௌராஷ்ட்ரம் கற்க ! ஸௌந்தர்யம் பெறுக !




இங்கே வரவும்

இப்பதிவு பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பதிவர் திரு. இட்லி வடை அவர்களிடம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க, அவர் தன் வலையகத்தில், இப்பதிவிற்கான இணைப்பினை கொடுத்துள்ளார்கள்,

ஸௌராஷ்ட்ர மொழி வளர்ச்சிப் பணிகளுக்கு, பதிவர் இட்லி வடை அவர்கள் தரும் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நன்றியுடன்,
மார்கண்டேயன்

இயற்கையின் இறை

இயற்கையின் இறை 

இரு வருடங்களுக்கு முன், தென் ஐரோப்பாவிலிருந்து வட ஐரோப்பா சென்ற பொழுது வானூர்தியிலிரிந்து எடுத்த சில படங்களை பகிர்ந்து கொள்கின்றேன்: 

வரவேற்புரை: 

இவ்வலையகத்திற்கு வந்திருக்கும் புதிய வரவுகளான, கோபி ராமமூர்த்தி, கீர்த்திகா ராகவன், பாப்பி, சாம் டேவிட் தனபால், தோழி, மயில் ராவணன், ராஜேஸ்வரி, நிர்மல் பாபு ஆகியோரை வருக வருக என அன்போடு அழைக்கின்றேன்.

இனி படங்கள் :







கடைசி படம் தான் மிக பிடித்தது, 

ஏனெனில், சிறு வயதில் திரைப் படங்களில் மேலுலகத்தை குறிப்பதற்கு, மேகத்தினாலான தரையை காண்பிப்பார்கள், 

அதே போல ஒரு அமைப்பு அரிதாக வாய்த்தது,

வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி.

Friday, February 25, 2011

ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧, ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011

பதிவுக்கு போகும் முன்: சிறு வேண்டுகோள் . . .

ஸௌராஷ்ட்ர மொழியில் சில தகவல் உள்ளதால், தயவுசெய்து,

௧. ஸௌராஷ்டிரா (sourashtra) எழுத்துருவி (unicode) வடிவத்தை (font) இங்கிருந்து தரவிறக்கம் (download) செய்து நிர்மாணித்துக் (install) கொள்ளவும்,


௨. பிறகு, இதே வலைப் பக்கத்தை, நெருப்பு ஓநாய் (Fire Fox) இணையப் பார்வையில் (INTERNET BROWSER) நோக்கவும்,
ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢩꢵꢰꢵ ꢒꢭꢵꢯꢵꢭꣁ - ꣒꣐꣑꣑
ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧
ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011
 SOURASHTRA LANGUAGE WORKSHOP - 2011
அஸ்கி தெங்கோ நமஸ்கார் ꢂꢱ꣄ꢒꢶ ꢡꢾꢖ꣄ꢒꣁ ꢥꢪꢱ꣄ꢒꢵꢬ꣄, எனும் அனைவருக்கும் வணக்கம், 
ஸௌராஷ்டிர மொழி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தொன்மையான ப்ராக்ருத (இயல் மொழி அல்லது இயற்கை அமைப்பில் உருவான) மொழியின் ஒரு பிரிவான ஸௌரஸேனியின் இன்றைய வடிவமாகும்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முகலாயர்களின் தொடர்ந்த படையெடுப்புகளால், ஸௌராஷ்டிர தேசமெனும் இன்றைய குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் வாழ்ந்த ஸௌராஷ்டிரர்கள் (ஆய்வில் உள்ள தகவல்), 

சிறிது சிறிதாக புலம் பெயர்ந்து, ஆந்திரம் வந்து, அங்கு விஜய நகரப் பேரரசில் செழுமை பெற்றனர்.
அந்நிகழ்வு, ஸௌராஷ்டிரா விஜயாப்தம், எனும் ஸௌராஷ்டிரர் புதிய ஆண்டுக் கணக்காக கொள்ளப்படுகிறது (ஆய்வில் உள்ள தகவல்).

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்டிருந்தாலும், நெசவுத் தொழிலில் உள்ள தனித் திறமையால் ஆஸ்தான ஆடை நிபுணர்களாக / நெசவாளர்களாக, (ஆய்வில் உள்ள தகவல்) விஜய நகரப் பேரரசின் நியமன நாயக்க மன்னர்களால் தமிழகம் வந்தனர். 

மதுரை மற்றும் பிற பகுதிகளில் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். 

தாய் மொழி ஸௌராஷ்ட்ரம் எனினும், பல்வேறு பிராந்திய மொழிகளான தெலுங்கு, வடமொழி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவைகளில் சிறந்த புலமை பெற்றனர். 

(இது பற்றி தனி பதிவாக எழுத உள்ளதால், பின்னர் விரிவாக விவரிக்கின்றேன்) 

காப்பியங்களை பல்வேறு எழுத்துக்களில் எழுதினர். 

இந்நிலையில் சுமார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஸௌராஷ்டிரா மொழிக்கென எழுத்துக்கள் உருவாக்க வேண்டுமென்ற உந்துதலில், இடைவிடா முயற்சியில், சீரான ஆராய்ச்சியில், 

வரகவி வேங்கடசூரி, பண்டித சதுர் வேதி லக்ஷ்மனாச்சார்யா, ராமாராய் ஆகியோரின் ஐம்பது வருட உழைப்பின் பயனாய், 

ஸௌராஷ்டிரா மொழிக்கு தனி சிறப்பு வாய்ந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டது. 
பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படாததாலும், தாய் மொழி எழுதிப் பழக வேண்டிய தேவையற்ற, அவசியமற்ற தன்மையாலும், சுமார் ஐம்பது ஆண்டு காலமாக ஸௌராஷ்டிரா மொழி சிறிது சிறிதாக தேய்ந்து வருகிறது.

சமீப கால கணினி வளர்ச்சியினாலும், 2008 ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வந்த ஆய்வின் மூலமும், ஸௌராஷ்டிரா மொழி எழுதிப் பழக மிக எளிய முறை வடிவமைக்கப்படுள்ளது. 

முதல் முயற்சியாக கடந்த ஜனவரி 29 ம் தேதி, கோழிகோடில் ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௬௯௮.௧ (698.1) எனும் ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 698.1, மேற்கொள்ளப்பட்டது.
அவ்வயமத்தில், இருபத்தி ஐந்து பேர், ஒரு மணி நேரத்தில் ஸௌராஷ்டிரா மொழி (நிற்க: தாய் மொழி ஸௌராஷ்டிரமாக கொண்டவர்கள்) எழுதுவதில் தேர்ச்சி பெற்றனர். 

இம்முயற்சிக்கு அனைத்து வசதிகளும் (நான்கு நட்சத்திர உணவகத்தில் உள்ள அறை, உணவு, இருப்பிடம், போக்குவரத்து) ஏற்படுத்தி கொடுத்து, எங்களின் முதல் முயற்சியே முழு வெற்றி பெறச் செய்தமைக்கு, திரு. நிரஞ்ஜன்குமார், திருமதி. ஸ்ரீ தேவி நிரஞ்ஜன்குமார், அன்புச் செல்வங்கள் சஞ்சனி மாய்,   அமர்சந்த் பபு, கிஷன் மாதவ் பபு, ஆகியோருக்கு  எங்களின் நெஞ்சார்ந்த நன்றி. இதைத் தவிர வேறென்ன சொல்ல,

மாய் - தங்கை, பபு - தம்பி,

இங்கு தான் முதல் முறையாக நன்றி என்ற வார்த்தைகளை எழுதுகின்றேன், 

திரு. நிரஞ்சன் அவர்களிடம் விடை பெறும் போது அவரிடம் சொன்ன ஒரே வார்த்தை, 

"உங்களுக்கு நன்றி சொல்லி முடித்துக் கொள்வதை விட, இதே போன்ற ஒரு பட்டறையை நடத்தி அங்கு உங்களுக்கு நன்றி சொன்னால் தான் தகும்" என்று விடை பெற்றேன்,  
இன்று அதற்கான தருணம் இறையருளாலும், நான் பயின்ற ஸௌராஷ்டிரா கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஆசிர்வாதத்தினாலும், அமைந்துள்ளது.

ஆம் நண்பர்களே, 

வரும் மார்ச் மாதம் 17 மற்றும் 18 ம் தேதிகளில், ஸௌராஷ்டிரா கல்லூரி, மதுரையில்,


ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢩꢵꢰꢵ ꢒꢭꢵꢯꢵꢭꣁ - ꣒꣐꣑꣑
ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧
ஸௌராஷ்டிரா மொழி பட்டறை -   2011
 SOURASHTRA LANGUAGE WORKSHOP - 2011
 நடைபெற உள்ளது, 
அனைவரும் பங்கெடுத்து இம்முயற்சி  வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

மேலதிக தகவல் கீழே: 
Place :

Sourashtra College,
Madurai - 625 004,
Bhaarada Kutumbakam (India)

Date :

March 17 & 18, 2011 (Two Days),

Course Fee : Rs. 100 /-
(Payment has to be made in CASH only during the Workshop days)

Last date for Registration : March 14, 2011.

As this programme is open to all, interested candidates (irrespective of age, academic qualification, professional background, etc.,) are invited to participate and learn writing in Sourashtra Language,

Certificate will be issued to all the participants,

Contact details :

M.S. Sureshkumar,
Administrator,
Vishwa Sourashtram - First International Journal in Sourashtra Language,
http://Sourashtra.info

E. Mail : kalaashaalo@sourashtra.info

Ph.: +91-81445 83647
தங்களின் மேலான அன்பையும் ஆதரவினையும் எதிர்நோக்கியிருக்கும், 
மார்கண்டேயன்.  

இந்த விவரம் பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், கேட்டுக்கொண்டர்க்கிணங்க, தங்களின் பதிவுகளில் பகிர்ந்துகொண்ட பதிவர்கள் khenikeri ꢓꢾꢥꢶꢒꢾꢬꢶஎனும் கதைசொல்லி, இட்லிவடை, கூடல் குமரன், கே.ஆர்.பி. செந்தில், நிகழ்வுகள் சிவமுருகன் மற்றும் ஜாக்கி சேகர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி. 

(2011) - புதிய ஆண்டா ?

(2011) - புதிய ஆண்டா ?

காலங் காலமாய் கணிக்கப்பட்ட
கணக்குகள் புறக்கணிக்கப்பட்டு

இடைச் சொருகலாய்
வந்த க்ரிகோரியக் கணக்கு
கண்மூடி கைகொள்ளப்பட

இழந்த இயற்கையின்
இம்மியளவும் உணர்ச்சியின்றி

இருண்ட நேரத்தில்
இடைவிடா கூச்சலோடு

கள்வெறி கைகோர்க்க
கட்டவிழ்ந்த காமத்தோடு

கல்தோன்றிய காலத்திற்கே
கட்டாய அழைப்பாய்

புதிய ஆண்டிற்கான நெறியறியாமல்
புது எண் மாற்றத்திற்கு
புல்லுருவிகளின்
புரிதலற்ற அழைப்பு . . .

புதிய ஆண்டு நமக்குமா ?

மார்கண்டேயன்,
மதுரை, பாரதம்.

மேலும் தகவலுக்கு  

இந்த வார்த்தைகளை வார்ப்பில் வார்த்து வளம் சேர்த்தமைக்கு வார்ப்பு குழவினருக்கு மிக்க நன்றி.

Saturday, January 15, 2011

உத்தராயண புண்ய காலம் மகர சங்கராந்தி பொங்கல் திருநாள் வாழ்த்துகள்,

பதிவுக்கு போகும் முன்: சிறு வேண்டுகோள் . . .

ஸௌராஷ்ட்ர மொழியில் வாழ்த்துகள் உள்ளதால், தயவுசெய்து,

௧. ஸௌராஷ்டிரா (sourashtra) எழுத்துருவி (unicode) வடிவத்தை (font) இங்கிருந்து தரவிறக்கம் (download) செய்து நிர்மாணித்துக் (install) கொள்ளவும்,

௨. பிறகு, இதே வலைப் பக்கத்தை, நெருப்பு ஓநாய் (Fire Fox) இணையப் பார்வையில் நோக்கவும்,

ꢂꢱ꣄ꢒꢶ ꢡꢾꢖ꣄ꢒꣁ ꢆꢡ꣄ꢡꢬꢵꢫꢠ ꢦꢸꢥ꣄ꢫ꣄ ꢒꢵꢭꢪ꣄ ꢪꢒꢬ ꢱꢖ꣄ꢒ꣄ꢬꢵꢥ꣄ꢡꢶ ꢦꣁꢖ꣄ꢔꢭ꣄ ꢮꢶꢯꢾꢰꢸꢥꢸꢒꢸ ꢪꣁꢥ꣄ꢥꢸ ꢩꣁꢬꢾ ꢮꢶꢱ꣄ꢮꢵꢱ꣄ ꢪꢾꢥ꣄ꢭꢬꢾꢱꢶ 

அஸ்கி தெங்கோ உத்தராயண புண்ய காலம் மகர சங்கராந்தி, பொங்கல், விஷேஷுனுகு மொன்னு (bhore) பொரெ விஸ்வாஸ் மென்லரேசி,

அனைவருக்கும் உத்தரயான புண்ய காலம் மகர சங்கராந்தி, பொங்கல் நல்வாழ்த்துகள் என்பதன் அர்த்தம் தான் மேலே உள்ளது,

இந்த இனிய நாளில்,

இவ்வலையகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நல்லிதயங்கள் செந்தில், ரகு, ஈஸ்வரி, கமலேஷ், தனி காட்டு ராஜா, அ(ட)ப்பாவி, அருண் பிரசாத், பிரசன்னா, எஸ் கேவீரகுமார், சிவகுமார், அருண் பிரசாத் ஜெ, கவியின் கவிகள், ரிஷபன் மீனா, ஸ்ரீ, குமரன் ராமு, சுந்தர்,

அனைவருக்கும் மனதர்க்கினிய நன்றி,

இவை மட்டும்மல்லாமல், இங்கிருப்பவைகளை பகிர்ந்து கொள்ள பாலமாய் இருக்கும், சௌராஷ்டிரா வொலா gher எனும் ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬꢵ ꢮꣁꢭꢵ ꢕꢿꢬ꣄ ஸௌராஷ்ட்ர இணைய இல்லம், ஸௌராஷ்டிரா கூகிள் வொலா கும்பு ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬꢵ ꢔꢹꢔꢶꢭ꣄ ꢮꣁꢭꢵ ꢔꢸꢪ꣄ꢦꢸ எனும் ஸௌ ராஷ்டிரா கூகிள் இணைய குழு, பாலை பல்கார்ஸ் கூகிள் வொலா கும்பு ꢦꢵꢭꣀ ꢦꢭꢒꢵꢬ꣄ꢱ꣄ ꢔꣂꢔꢶꢭ꣄ ꢮꣁꢭꢵ ꢔꢸꢪ꣄ꢦꢸ எனும் பாளையங்கோட்டை ஸௌராஷ்ட்ரர் கூகுகில் இணைய குழு,  , இந்திய தொழில் நுட்பக்கழகம், கடக்பூர், யாஹூ தமிழர் குழு, மற்றும் மின் மடலாடற் குழு,

ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி,


தன் கருத்துக்களையும், கருத்தாய்வினையும் தரும் திரு. சிவராமன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி,

சிறு குறிப்பு நண்பரே:

இந்த இணைய பெருவெளியில், சிறு துளியினும் துளி தான் இந்தப் பதிவு, நீங்கள் குறிப்பிடும் உயரத்தில் நான் இல்லை, 

எழுத்தாளனும் அல்ல, இங்கே பதிகின்ற விஷயங்கள் மூலம் இதயங்களை இணைக்கும் முயற்சி அவ்வளவே,

அதனால், எழுத்தாளன், வாசகன் என்ற பிரிவை விட, ஒத்த கருத்துடையவர், சிந்தனையுடையவர் என்று இருப்பது நல்லது,

உங்களிடம் இருந்தும் படைப்புகளை எதிர் நோக்கியிருக்கின்றேன்,

எங்கோ ஒரு ஓரத்தில் இருந்த என்னை வெளிச்சம் காட்டியவர்கள் மேற் சொன்னவர்கள் தான்,

அதில் சிறப்பிடம், பதிவர் இட்லிவடை அவர்களைச் சாரும், அவர் தான் என்னுடைய 'சிறப்பு அடையாள அட்டை பதிவின் தொடர்பை தன் வலையுலகில் கொடுத்து, பலரை சென்றடையச் செய்தவர்,

மேலும், பலரை அந்தப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்,

சுருங்கக் கூறின், கீழே உள்ள இந்த வரி போலத் தான்,

என்னுடைய இருப்பு,

மேலே சொன்னவர்களால் தான்,

உயிர்ப்பு,

இந்தப் பொங்கல் நாளில் பொங்கட்டும் பொலிவான சிந்தனை,


நன்றி,
மார்கண்டேயன்.