மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Wednesday, April 21, 2010

சதையானவள் . . .

மதிப்பிற்குரியோரே,

மார்கண்டேயனின் மலர்ச்சோலைக்குள் நான்காவது மலராய் வந்திருப்பவர்,

'சதையானவள்',

திண்ணையில் திண்மையுடன் வீற்றிருக்கிறார் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004184&format=html),

இவரை இணையத் திண்ணையில் இருக்க இடம்கொடுத்த திண்ணையில் அமர்ந்து தமிழ்த் திறன் செய்யும் திண்ணை (www.thinnai.com) குழுவினருக்கு திவ்யமான வணக்கம்,

திண்ணையில் அமர்ந்த நாள்: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் 698, முதல் மாதம், ஐந்தாம் தேதி.

சதையானவள் . . .

ஜாதி இல்லை மதமும் இல்லை,
காதல் இல்லை காமம் இல்லை,
வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,

. . .

இச்சையின் பிச்சை பசி போக்க,
எச்சிலால் தாகம் தீர்க்க,
வியர்வையின் வீச்சங்கள் விசிறி வீச,

. . .

குடிகெட்ட(கெடுத்த)குறிகளாலே,
குறிகளின் குறிக்கோள்களுக்கென்றே,
குமைந்து போன வாழ்க்கையில்,
சதையென்ற சவமாகி,
சதையாலே 'சமாதி' அடைந்திட்டோமே ...

மார்கண்டேயன்.

Friday, April 16, 2010

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

மார்க்கண்டேயனின் மனதில் மலர்ந்த படத்திற்கான பதிவு, ஒரு குறுங்கவிதையாக வார்க்கப்பட்டுள்ளது

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

உனக்கென்ன . . .
ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்,
அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிரா விஜயாப்தம் 698, முதல் மாதம், மூன்றாம் தேதி.


என் வரிகளை வார்ப்பில் வார்த்து, வளரச்செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழிய வாழ்த்துகள்,


மார்கண்டேயன், மதுரை, பாரதம்