மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Monday, July 5, 2010

மதசார்பின்மை

காமப்பசி தீர்க்க
கட்டிலுக்கு துணைதேடி
தூதுபோகும் வேளைகளில்

அவிழ்த்துப்போட்டு அரங்கேற்றும்
ஆரவார ஆர்பரிப்பை
அகன்ற திரையில் அசையாமல் காணும்பொழுதுகளில்

பணமின்மையை பகடையாக்கி
பணம்கொடுத்து வட்டி வாங்கி
வயிர் நிரப்பும் நேரங்களில்

அழகாக பேரம் பேசி
ஆதிக்கத்தை அமல்படுத்தும்
அகங்கார செயல்முறையில்

உயிர்க்கான அவசரத்தில்
உதவி பெறும்
உயர் நிலையில்

மதசார்பின்மை
மறக்காமல்
நடைமுறையில்

நன்றி, திண்ணை.

13 comments:

  1. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் நண்பரே!

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராஜன்.

    ReplyDelete
  3. தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி பதிவர் கும்மி.

    ReplyDelete
  4. இன்றைய அத்தியாவசிய பானம் ஆன ‘டாஸ்மாக்’ எங்கே?

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  5. நன்றி, பிரபு, 'டாஸ்மாக்' விரைவில் . . .

    ReplyDelete
  6. சமுக தேடல் தெரிகிறது கவிதையில் தோழரே...

    வாழ்த்துக்கள்..

    தொடருங்கள்...

    ReplyDelete
  7. நன்றி கமலேஷ், தங்களின் தொடர்ந்த வருகைக்கும், கவனத்திற்கும்,

    ReplyDelete
  8. எல்லா கவிதையுமே நல்லா இருக்கு ....தொடர்ந்து எழுதுங்க தல ....

    ReplyDelete
  9. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete
  10. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தனிக் காட்டு ராஜா . . .

    ReplyDelete
  11. மார்க்கு, சூப்பரயா நீயி (சாலமன் பாப்பையா தொனியில் படிக்கவும்)

    ReplyDelete
  12. வருகைக்கும், (பின்)ஊட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது