மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Monday, February 15, 2010

என் உயிர்... (தோழி)

எம் நேசத்திற்குடையீர்,

என்னுயிர்க்கு தோழியாய், துணையாய் நின்றவளை, நிலாச் சாரலலில் நிலவின் குளுமையோடு வைத்துள்ளேன், எம்முயிரை உணர்க . . .

என் உயிர்... (தோழி)

என்னவளே . . .
என்னை எனக்கறிவித்து,
என்னுள்ளே என்னை எழுப்பி,
எனக்கேற்றம் கொடுத்து,
என்னுள் என்னை நிலைக்கச் செய்து,
என்னை எங்கும் நிறைவாக்கி,
என் நெஞ்சைப் பஞ்சாக்கி,
என் வீழ்ச்சிகளை விதைகளாக்கி,
என் வீரத்தை விவேகமாக்கி,
என் எழுத்தை கவிதையாக்கி,
என்னுயிரை உவப்பாக்கி,
என் வாழ்வை வளமாக்கிய,
என்னவளே எப்படியடி
என் எலும்பை சுக்குநூறாக்கி,
என் நெஞ்சை இரண்டாக்கி,
என்னிலிருந்த உன்னை இடம்மாற்றி,
எம்மையும் உம்மையும் உடன்பிறப்பாக்கி,
எம் நினைவை நிர்மூலமாக்கி,
எம்மைப் பேசும் ஊமையாக்கி,
எம் வாழ்வை சிதிலமாக்கி......
. . .
.....

என் கண்ணே எப்படியடி,
என்னை இன்னும் உருக்குலையாமல் வைத்திருக்கிறாய்?
என் கண்ணே எப்படியடி
எம் முன் கலைந்த நேசத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறாய்
என்னுயிர்த் தோழியே நான்
எப்பிறப்பில் செய்த தவமடி நீ?

எம்முயிரின் நினைவுகள் நிலாச்சாரலில், நீங்காமல் நிலைபெற செய்த நிலவு (நிலாச்சாரல்) குழுவினருக்கு,

நித்தம் உரைக்கின்றேன், நிலையான நன்றி,

Wednesday, October 21, 2009

நீ வருவாய்

நீ வருவாய்
நீ வருவாய் என . . .

நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்

நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்

நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்

நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்

நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன்

நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்

நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .

நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன்

நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்

என்ற என் இருப்பை உறுதி செய்ய

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .


மார்கண்டேயன்

அன்புடையீர்,

கவிதையை வாசித்தமைக்கு நன்றிகள் பல,

நான் வார்த்த வார்த்தைகளை வளம் குறையாமல் வார்த்தெடுத்து, என்னை கவிஞர்கள் வரிசையில் அமர்த்திய வார்ப்பு இணையதள குழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,

இந்த கவிதை கீழ் காணும் வலைத்தொடர்பில் உள்ளது,

http://www.vaarppu.com/view/1946