மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Sunday, November 14, 2010

முதலாளித்துவத்தின் சுறண்டல்

இயல்பு வாழ்வின்
இறகொடித்து
இயந்திரமாக்கினார்

பண்டமாற்றை
பணமாக்கி
பண்பாடு அகற்றினார்

படிக்கும் கல்விதனை
பணம் செய்வதற்கென்றே
பதியச் செய்தார்

விளையும் பொருளில்
விதிகள் கொண்டு
வினை மாற்றி வீணாக்கினார்

விலை நிலம்
விஷமாக, விவசாயியை
விஷம் உண்ணவைத்தார்

தாய்ப்பால் முதல்
தாரம் சுமக்கும் கரு வரை
தனி விலை வைத்தார்

உள்ளாடை போல்
உள்ளுருப்புக்கும்
உரிய விலை செய்தார்

விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்

காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு . . .

ஐயன்மீர் . . ., தயவுசெய்து அதற்கும்,
விலை வைத்து விடுங்கள்
உயிர் விடும் முன் முதலாளியாகிறேன்

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழ்த்துகள்.

. . .  திரு. சிவராமனின் மின்னஞ்சலின் தொடர்ச்சி,

இந்த கவிதையில்
விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு.

இந்த வரிகளில் மனிதன் விடும் கழிவு உரமாக இரண்டாம் உலகபோர்முடிவில்  ஐரோப்பாவின் சில பகுதிகளில்  உரதட்டுப்பாட்டின் காரணமாக விலைவைத்து, விற்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டுள்ளேன் . மேலும் முன்பே நமது நாட்டிலும் , தற்போது வடகொரியவிலும் மனிதகழிவுக்கு விலையுண்டு . உரங்களுக்கு மனித கழிவை பயன்படுத்த எல்லா நாடுகளிலும் கணிசமான செலவில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளகிறார்கள்.

அடுத்து இந்த வரியில்

உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்

என்ற வரியில் உள்ள கருத்துகளில் அதே ஐரோப்பாவில் மருத்துவ ஆராய்சிக்கு முன்பெல்லாம் பிற்போக்கு சமயவாதிகள்  மனித உடலை அறுப்பதையும் , ஆராய்ச்சி செய்வதையும் அனுமதிக்கவில்லை அப்போது , சில மருத்துவர்கள்  திருடர்களிடம் இறந்த உடலை புதைத்தபின் தோண்டி எடுத்து விலைகொடுத்து பெற்றுக்கொண்டார்கள் . இன்றும் கூட நமது நாட்டில் மந்திர, தந்திரங்களுக்கு, பயன்படுத்த உடல்களும், எலும்புகளும் மறைமுகமாக விற்கப்படுகிறது .  
 
- - - - - -
நன்றி, சிவராமன், புதிய தகவல், 

நீங்கள், அதன் சுட்டிகளை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், 
 
கருத்துக்களை, கமெண்ட்ஸ் பகுதியில் அனுப்பினால் மிகவும் எளிதாக இருக்கும் (இருவருக்கும்),
தங்களின் பொறுமையான எழுத்து, நன்றாக உள்ளது, விரைவில் உங்களின் பதிவுகளை காண்பதற்கு ஆவலாக உள்ளது, 

நட்புடன்,
மார்கண்டேயன்.
- - - - - -

2 comments:

  1. முதலாளித்துவத்தின் சுறண்டல்களை அப்பட்டமாக சொல்லும் கவிதை! அருமை!

    ReplyDelete
  2. நண்பா நன்றாக இருக்கிறது கவிதை. கல்லூரி நாட்களில் நீ இவ்வாறெல்லாம் எழுதியதாக நினைவே இல்லை.கவிதையின் கருத்துகளில் எனக்கு முரண் இருந்தாலும் கவிதையாக்கம் உனக்கு நன்றாக வருகிறது. :)

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது