மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Monday, July 5, 2010

மதசார்பின்மை

காமப்பசி தீர்க்க
கட்டிலுக்கு துணைதேடி
தூதுபோகும் வேளைகளில்

அவிழ்த்துப்போட்டு அரங்கேற்றும்
ஆரவார ஆர்பரிப்பை
அகன்ற திரையில் அசையாமல் காணும்பொழுதுகளில்

பணமின்மையை பகடையாக்கி
பணம்கொடுத்து வட்டி வாங்கி
வயிர் நிரப்பும் நேரங்களில்

அழகாக பேரம் பேசி
ஆதிக்கத்தை அமல்படுத்தும்
அகங்கார செயல்முறையில்

உயிர்க்கான அவசரத்தில்
உதவி பெறும்
உயர் நிலையில்

மதசார்பின்மை
மறக்காமல்
நடைமுறையில்

நன்றி, திண்ணை.