மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, February 25, 2011

(2011) - புதிய ஆண்டா ?

(2011) - புதிய ஆண்டா ?

காலங் காலமாய் கணிக்கப்பட்ட
கணக்குகள் புறக்கணிக்கப்பட்டு

இடைச் சொருகலாய்
வந்த க்ரிகோரியக் கணக்கு
கண்மூடி கைகொள்ளப்பட

இழந்த இயற்கையின்
இம்மியளவும் உணர்ச்சியின்றி

இருண்ட நேரத்தில்
இடைவிடா கூச்சலோடு

கள்வெறி கைகோர்க்க
கட்டவிழ்ந்த காமத்தோடு

கல்தோன்றிய காலத்திற்கே
கட்டாய அழைப்பாய்

புதிய ஆண்டிற்கான நெறியறியாமல்
புது எண் மாற்றத்திற்கு
புல்லுருவிகளின்
புரிதலற்ற அழைப்பு . . .

புதிய ஆண்டு நமக்குமா ?

மார்கண்டேயன்,
மதுரை, பாரதம்.

மேலும் தகவலுக்கு  

இந்த வார்த்தைகளை வார்ப்பில் வார்த்து வளம் சேர்த்தமைக்கு வார்ப்பு குழவினருக்கு மிக்க நன்றி.

Sunday, November 28, 2010

உ(து)யர வாழ்க்கை


 இனி உயரப் போறவைகளுக்கெல்லாம் . .
ஊட்டம் கொடுப்பதற்கு
தான் உயரத்தில் நாங்கள் . . .


உயர்வை காண முடியவில்லை
என்றழுபவர் மத்தியில்
உயரங்கள் மட்டுமே எங்கள் உயிர்க்கான வழி
எங்கள் உழைப்பின்
எழுத்துக்கள் எடுத்தெறியப்பட்டு
உயரங்கள் அழகூட்டப்படும்


உறங்கும் போது போனாலென்ன
உயரத்திலிருந்து போனாலென்ன
சிந்தனைகளிலும் உயர்ந்து தான்


உயிர்போன பின்
உண்டி உறைவிடம் ஊன்(உடல்) அனுப்ப
எஞ்சியவற்றை உறையில் அனுப்பும் உண்மை


உயரங்கள் மாறிக்கொண்டிருக்கும்
உயிர்க்கான உத்தரவாதம்
மட்டும் எள்ளளவும் மாறாமல் 

பயமில்லையா ? யார் சொன்னது
எங்கோ ஒரு தேசத்தில், உறவுகள் உயிரோடு இருக்கவேண்டுமே,
என்ற பயம் தான், எப்பொழுதும் . . .


 எப்பொழுதாவது உயரத்தில்
உள்ளவர் கணக்கு உதைக்கும்
உச்சி வெயிலில் கண்ணீர் உறைந்து போயிருக்கும் 


உயர்ந்த பணி
முடித்த தருணத்தில்
விண்ணுலகம் உயர்ந்தவன் கணக்கும் உறைக்குள் 
உயரம் உருப்பெறும் போது
உள்ளே செல்ல
அனுமதி ஏது ? 


எங்கோ ஓரிடத்தில்
எதுவோ சரிசெய்ய
ஊஞ்சலாடுவதோடு உறவு முடிந்துவிடும் 

உடலின் உணர்வுகளும் உபாதைகளும்
நீர்த்துபோயினும்
வயிற்றிற்கு மட்டும் அவ்வப்போது 

உயரம் தாண்டுதலில்
உயிர் மிச்சமிருந்தால் . . . ?!!!
ஊருக்கு சென்று . . . 

முதலில் இந்தக் கவிதை எழுதுவதற்கு கருவமைத்த திரு. ரிஷான் ஷெரிப் அவர்களின் பதிவிற்கும், மிக அரிய படங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்,

நான் வார்த்த வார்த்தைகளை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

என்று இந்தப் படங்கள் கண்டேனோ, அன்றே, அர்த்தமில்லாத புலம்பல்கள் அதிகம் வருவதில்லை.

இக்கவிதை, எங்கோ பிறந்து வயிறுக்காக வானம் சுடும் வலிகளுடன் வாடும் மனித உறவுகளுக்கு சமர்ப்பணம்,

ஐயன்மீர், வணங்குகின்றேன் உங்களின் உழைப்பை.

திரு. சிவராமனின் இரண்டாவது மின்னஞ்சலையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

2011/1/5 sivaji sivaji.E.Raman., <. . . . @gmail.com>
அன்பு நண்பருக்கு வணக்கம் ,
எப்போதாவது நேரம் இருக்கிறது அப்போதெல்லாம் , வலைகளில் அலைகிறேன் , மிகப்பெரிய கடலுக்குள் முத்துகள் எங்காவது தான் இருக்கிறது. அது போல வலை கடலுக்கு உள்ளேயும் வேண்டாத விஷ மீன்கள் வண்ண ஜாலம் காட்டி அலைவது போல வேண்டாத விஷயங்கள் தான் அதிகம் உள்ளது .  வேண்டிய  விசயங்களை தேடிபிடிபதும் , பிடித்த
விசயங்களை முழுதும் படிப்பதும் , நேரம் சரியாகப் போய்விடுகிறது .
ஆனால் , அந்த விசயங்களை தேடிப்பிடித்து நமக்கும் படிக்க அளிபவர்களை, பாரட்ட கூட வேண்டாம் , ஆனால் படித்ததற்கு சாட்சியாக , அவர்களுக்கு
நன்றி தெரிவிப்பதும் அவசியம். அதையாவது செய்வது அவர்களை கௌரவிக்கும் , நான் தங்கள்  உ(து)யர வாழ்க்கை என்ற கவிதையைப் படித்தேன்  , வெளிநாடுக் கட்டங்களின் உயரத்தை மட்டுமே பார்த்த நான் இன்று தான் உண்மையையும் பார்த்தேன் நடுங்க வைக்கும் உயரத்தில் தம்மை நம்பி இருப்பவர்களுக்காக நரகத்தில்  (நான் இன்றுவரை வெளிநாட்டின் நல்ல நகரத்தில் தான் வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் இருப்பதாக  எண்ணினேன் அது அந்த கவிதையின் உயரத்திலும் , உண்ணத்திலும் , உடைந்து போனது .)
வாழ்பவர்களின் உயிர் என்கண் முன்னே உசலடுகிறது . ஆனால் அவர்கள் வாழவேண்டும் பல ஆண்டு .
நன்றி ! வணக்கம் !
நட்புடன் , E . சிவராமன் ,

- - - - - -


அன்பின் சிவராமன்,

உங்கள் எண்ணங்களுக்கு என் வந்தனங்கள்,

வருகைக்கும், வார்ப்பிர்க்கும் மிக்க நன்றி,

வெளிநாடு என்பது ஒரு வெளிப்புற மாயையே,

அங்கு வாழும் ஒவ்வொரும் கணமும், நீங்கள் அந்நிய நாட்டவர் என்பது, ஏதாவது ஒரு வகையில் அறிவிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கும்,
இதில், பணக் கஷ்டமும் சேர்ந்தால்:

அரேபியா அனுபவங்களை திரு. சிவா, இங்கு பகிர்ந்துள்ளார், இத்தனைக்கும் அவர் நல்ல பதவியில் பணி புரிந்தவர், அவருடைய அனுபவமே இப்படி என்றால்,

கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்களின் நிலையை, திரு. செந்தில் இங்கு செதுக்கியுள்ளார்,

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்,

தொடருங்கள், உங்கள் பதிவுலகின் பயணத்தை, பல தகவல்கள் அறிந்துகொள்ளலாம்,

மகிழ்வுடன்,
மார்கண்டேயன் 
         

Saturday, November 20, 2010

பிரியாத பிரிவுகள்

பிரிந்தவுடன் கலந்து
பிறந்து பின்
பிறப்பில் பிரிக்கும் பிரிவு

பின் பிம்பங்களாய்
பிடித்துக் கொடுக்கப்பட்டு
பிரிவுகள் பலவாய் பிறந்து

பிரிவிற்கான முதலீடை பணத்தால் செய்ய
பிரித்தாளும் ருசி கண்டு
பிறதொரு காரணிகளாய் சாதி, மதம் கை கொடுக்க

பிரித்துப் பார்த்து, பிரித்துப் பார்த்து
பிரிவுகளைக் கூட்டி
பிரிக்கப்பட்டவைகளில் ஒதுங்கி

பிரிந்த சிலவற்றில் சேர்ந்து
பிரிவென்ற சொல்லை மறைத்து
பிரியவில்லை என்ற பிரிய பூச்சு கொடுத்து

பிரிவிலும் மகிழ்ந்து
பிரிவுகள் பலவாய் பெருக்கி
பிரிந்த பிரிவுகள் சில சேர்த்து

பிரிவிலும் பிளவாக்கி
பிரிந்து நின்று, பிறப்பறுக்கும் பிரிவுணர்தவுடன்
பிரிவின் வலி அறிந்து

பிரிவறுத்த பின்னொரு நாளில் மனிதம் பிறக்க
பிரிவில்லையென்று பிதற்ற
பிரித்தவைகளைத் தேடியலைய . . .

பிரிந்திரிந்தது பிரித்தவரின் உடல் . . .
பிரிந்த பிண்டத்தை கண்டு . . .
பிதற்றியது பிரியப்போகும் பிணம்

பிரிவில் வாழ வழி கண்ட
பிணங்கள் சில
பிரிவுகளோடு பிரியாமல், இன்னும் . . .

இக்கவிதையை 'திண்ணையில்' அமர இடம்கொடுத்த திண்ணியர்க்கு தித்திப்பான நன்றி.

2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன்,  முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.

. . . . . .

மற்ற இரு கவிதை

நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்

இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட)  ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .

இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .

இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும், அறிய ஆவல் கொள்கிறேன் .

இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .

வாசகன்

E . சிவராமன்
மதுரை        
- - - - - -

அன்பின் சிவராமன்,

தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,

மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,

கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,

நட்புடன்,
மார்கண்டேயன். 

Sunday, November 14, 2010

முதலாளித்துவத்தின் சுறண்டல்

இயல்பு வாழ்வின்
இறகொடித்து
இயந்திரமாக்கினார்

பண்டமாற்றை
பணமாக்கி
பண்பாடு அகற்றினார்

படிக்கும் கல்விதனை
பணம் செய்வதற்கென்றே
பதியச் செய்தார்

விளையும் பொருளில்
விதிகள் கொண்டு
வினை மாற்றி வீணாக்கினார்

விலை நிலம்
விஷமாக, விவசாயியை
விஷம் உண்ணவைத்தார்

தாய்ப்பால் முதல்
தாரம் சுமக்கும் கரு வரை
தனி விலை வைத்தார்

உள்ளாடை போல்
உள்ளுருப்புக்கும்
உரிய விலை செய்தார்

விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்

காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு . . .

ஐயன்மீர் . . ., தயவுசெய்து அதற்கும்,
விலை வைத்து விடுங்கள்
உயிர் விடும் முன் முதலாளியாகிறேன்

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழ்த்துகள்.

. . .  திரு. சிவராமனின் மின்னஞ்சலின் தொடர்ச்சி,

இந்த கவிதையில்
விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு.

இந்த வரிகளில் மனிதன் விடும் கழிவு உரமாக இரண்டாம் உலகபோர்முடிவில்  ஐரோப்பாவின் சில பகுதிகளில்  உரதட்டுப்பாட்டின் காரணமாக விலைவைத்து, விற்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டுள்ளேன் . மேலும் முன்பே நமது நாட்டிலும் , தற்போது வடகொரியவிலும் மனிதகழிவுக்கு விலையுண்டு . உரங்களுக்கு மனித கழிவை பயன்படுத்த எல்லா நாடுகளிலும் கணிசமான செலவில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளகிறார்கள்.

அடுத்து இந்த வரியில்

உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்

என்ற வரியில் உள்ள கருத்துகளில் அதே ஐரோப்பாவில் மருத்துவ ஆராய்சிக்கு முன்பெல்லாம் பிற்போக்கு சமயவாதிகள்  மனித உடலை அறுப்பதையும் , ஆராய்ச்சி செய்வதையும் அனுமதிக்கவில்லை அப்போது , சில மருத்துவர்கள்  திருடர்களிடம் இறந்த உடலை புதைத்தபின் தோண்டி எடுத்து விலைகொடுத்து பெற்றுக்கொண்டார்கள் . இன்றும் கூட நமது நாட்டில் மந்திர, தந்திரங்களுக்கு, பயன்படுத்த உடல்களும், எலும்புகளும் மறைமுகமாக விற்கப்படுகிறது .  
 
- - - - - -
நன்றி, சிவராமன், புதிய தகவல், 

நீங்கள், அதன் சுட்டிகளை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், 
 
கருத்துக்களை, கமெண்ட்ஸ் பகுதியில் அனுப்பினால் மிகவும் எளிதாக இருக்கும் (இருவருக்கும்),
தங்களின் பொறுமையான எழுத்து, நன்றாக உள்ளது, விரைவில் உங்களின் பதிவுகளை காண்பதற்கு ஆவலாக உள்ளது, 

நட்புடன்,
மார்கண்டேயன்.
- - - - - -

Saturday, November 6, 2010

நண்பேன் . . . ?!?

மூலையில் முனகிக்கொண்டிருந்தவனை
முன் நிறுத்தி
முகவரி கொடுத்தேன்

முகவரி பெற்றவன்
முடிவதெல்லாம் தன்னாலென்று
முழுமதியற்று முழங்கினான்

முழங்கிய முட்டாள்
முட்டுக் கட்டையானான்
முடிவெடுக்க விடாமல்

முன் ஏற்றுக் கொண்ட பணிகள்
முடங்கவைத்து
முழுமகிழ்ச்சி கொண்டான்

முடிவதெல்லாம் தன்னால்
முடிவதென்று
முடிவற்ற பிம்பம் கண்டான்

முச்சந்தியில் பிதற்றினான்
முடிந்த இடங்களிலெல்லாம்
முரசடித்தான்

முரசொலி பொறுக்காமல்
மூடச் சொன்னேன் வாயை
மூடன் சொன்னான் வென்றதாய்

முழுதும் அறிந்தவர்
முன் வந்து சொன்னார்
முனகுபவனெல்லாம் முடியாதவர்

முன்னிறுத்துவது முடங்கிவிடுமென்று
முழுதும் உணர்ந்தாலும்
முயற்சிகள் அயர்ந்தன

முடிவெடுத்தேன்
முயற்சியற்றவனை
முன்வைப்பதில்லையென

முடிந்தவரை எதிரிகளை சந்திக்கின்றேன்
முடிவு வரும் காலம் வரை
முழுதுமறிந்த பின் முழங்குகின்றேன் நண்பேன் . . .

இக்கவிதையை திண்மையுடன் திண்ணையில் வீற்றச் செய்த திண்ணை ஆசிரியர்க் குழுவினருக்கு நன்றி.


2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன்,  முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.



மற்ற இரு கவிதை

நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்

இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட )    ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .
இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .
இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும் , அறிய ஆவல் கொள்கிறேன் .
இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .
வாசகன்
E . சிவராமன்
மதுரை       

அன்பின் சிவராமன்,

தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,

மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,

கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,

நட்புடன்,
மார்கண்டேயன். 

Saturday, October 30, 2010

மேன்மக்கள்

மலக்குழியில் இறங்கி
மனமிறந்து
மலம் அள்ளுபவரும்

சாப்பாட்டில் கை வைக்க
சாக்கடை அள்ள
சமாதானம் செய்துகொண்டோரும்

சுயகழிவகற்ற முடியாத
நோய் சுற்றிய மனிதனை
சுத்தம் செய்வோரும்

பிணவாடையின்
வீச்சங்களை விட்டொளித்த
பிண்டமறுப்போனும்

கலைக்கென்று சொல்லியே
காமப் பசியாற்றும்
கலைச் செல்விகளும்

சொந்த வீட்டிலும்
சுத்தமில்லா சுரணையற்றோர்
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும்

ஆயிரக்கணக்கானோர்
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்

தொலைத்த காமத்தால்
வயிற்றில் தொடர்வதை
வழித்து எடுத்து வழிசெய்வோரும்

அவசரத்தில் பிறந்ததால்
அனாதையாக்கப்பட்ட
அன்பான குழந்தைகளும்

குப்பையை கிளறி
குடும்பம் நடத்தும்
குடியானவர்களும்

விலைபேசப்படும் உலகில்
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்
விவரம் கெட்ட விவசாயியும்

யார் வாழ்ந்தாலும்
வாழத் தெரியாத
மேன்மை கெடாத இந்த
மேன்மக்கள்
இன்னும் எத்தனை ஆயிரமோ ?

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.

Sunday, October 24, 2010

மொழியாள்(ழ்)

அந்நிய தேசமது
அகலாத இரவின் நீட்சி
அதிகாலைப் பொழுது
ஆழ ஊடுருவும் குளிர்

அழுத்தம் கொடுக்கும் வயிறு
அடித்து எழுப்ப
அவசரமாக அவ்விடம் ஓட . . .
அங்கே அழகி ஒருத்தி

அவ்வேளையிலும்
அழகாக்கிக் கொண்டிருந்தாள்
அலுங்காமல் அசிங்கமாக்குமிடத்தை
அவசரமறிந்து பார்த்தாள்

அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தாள்
அவசரமாய் கதவடைத்து
அழுத்தம் அகற்றுகிறேன்
அலுக்காமல் நின்றவள்

அமைதியாய் தொடர்கிறாள், தான்
அனுதினம் செய்யும் பணியை
அடிமனதில் ஏதோ ஒன்று அறுக்க
அங்கிருந்து அன்பு பிறக்க

அவளின் கண்களுக்கு கொடுக்க
ஆறுதலாய் ஏற்றுக்கொண்டு
அவள் வேலையை தொடர்கிறாள்
ஆயிரம் மொழிகளுக்கு அடிப்படையான
அன்பெனும் மொழியை உணர வைத்த
அழகு மொழியாள்(ழ்)

இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.

Sunday, October 3, 2010

நான் இறந்து போயிருந்தேன் . . .

நான் இறந்து போயிருந்தேன் . . .
நிராகரிப்பின் நீச்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்
நான் இறந்து போயிருந்தேன்
எறிந்த தரை இருப்பது போல
உயிர் இருந்தும் . . .

ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
'நான்' இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!

தாய்ப்பால் தடை செய்யப்பட்ட
காலம் தொட்டு
பால்யத்தில் கரம் பிடித்தவளின்
பிரிவு உட்கொண்டு
கணக்கற்ற தடவை
நான் இறந்து போயிருந்தேன் . . .

தொடர்ந்துகொண்டே இருக்கிறது
இறப்பும் பிறப்பும்
பள்ளித் தேர்வில் தவறிய போது
கல்லூரித் தகுதி அடையாதபோது
இன்னும் எத்தனையோ . . .

புதிது புதிதாய் . . .
'நான்' மட்டும் மாறாமல்
இருகோட்டுத் தத்துவமாய்
இறந்து கொண்டேயிருக்கின்றேன் . . .

இத்தனை முறை
மீள்த்துயிர்ந்தாலும்
இறுதி மூச்சு உள்ளவரை . . .
உதிரம் உளுத்துப் போகும் வரை
இனி மாற்ற முடியாத
இறுதிக்கோடாய்

இயல்பாய் இவனுள் சென்றவளை
இதயமறுத்து ஈருடலாய்
மெய்பித்தபோது . . .
வக்கற்றவனாய் . . .
கடைசியாய், உயிரோடு
நான் இறந்து போயிருந்தேன் . . .
இனிமேல் மீள முடியாமல்

இது திரு. கார்க்கி அவர்களின் வலைப்பூவில் பாரத் பாரதி அவர்கள் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'நான் இறந்து போயிருந்தேன் . . .' சவால் கவிதைப் போட்டிக்காக எழுதியது.

இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.

Thursday, September 23, 2010

காலச்சுவடுகள் . . .

பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,

எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,

முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,

எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,

மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,

காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .

நன்றி, வார்ப்பு.

Friday, August 13, 2010

ஓடி உதைத்து விளையாடு...

நிராகரிப்பு
நம்பிக்கை துரோகம்
நயவஞ்சக கூட்டம்
பந்துகளாய் உன்னை
பந்தாட வரலாம்
உண்மை உயர்சிந்தனை
உறுதியான உள்ளம், உடல் . . .
ஊக்கம், விடாமுயர்ச்சியுடன்
உன்னை உரமேற்றி வைத்துக்கொள்
ஒடுங்கிப்போகாமல், ஓய்ந்துவிடாமல்
ஓடி உதைத்து விளையாடு

நன்றி, வார்ப்பு

Monday, July 5, 2010

மதசார்பின்மை

காமப்பசி தீர்க்க
கட்டிலுக்கு துணைதேடி
தூதுபோகும் வேளைகளில்

அவிழ்த்துப்போட்டு அரங்கேற்றும்
ஆரவார ஆர்பரிப்பை
அகன்ற திரையில் அசையாமல் காணும்பொழுதுகளில்

பணமின்மையை பகடையாக்கி
பணம்கொடுத்து வட்டி வாங்கி
வயிர் நிரப்பும் நேரங்களில்

அழகாக பேரம் பேசி
ஆதிக்கத்தை அமல்படுத்தும்
அகங்கார செயல்முறையில்

உயிர்க்கான அவசரத்தில்
உதவி பெறும்
உயர் நிலையில்

மதசார்பின்மை
மறக்காமல்
நடைமுறையில்

நன்றி, திண்ணை.

Tuesday, June 29, 2010

முடிந்து போன பாதை

ஒவ்வொரு வினாடிகளும்
முடிந்து போன பாதையாய்
மாறிக்கொண்டிருக்கும்
இடைவிடாத வாழ்க்கை பயணத்தில்
முன் உள்ள நேரங்களை
முயற்ச்சியின் வழி முன்னிறுத்தி
முடிந்ததற்கும்
முடியப்போறவைகளுக்கும்
முறியாத முடிச்சுகள் போட்டுவைப்போம்

நன்றி, வார்ப்பு

Monday, May 31, 2010

என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகள்

சுயம் தேடும் பறவையாக . . .
என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகளிலிரிந்து
எப்பொழுதாவது என்னை மீட்டெடுக்கிறேன்
மீட்டெடுக்கும் தருணங்களில் . . .
மீதமுள்ள வாழ்க்கையின்
வாக்கியங்கள்
நிகழ்கால நிஜங்களால்
முற்றுப்பெறாமல்...
நீரோடையில் மிதக்கும் தக்கையாக . . .

நன்றி., வார்ப்பு இணைய இதழுக்கு.

Friday, May 28, 2010

பரம்பொருள் பார்த்தோமே

பாய்விரிப்பதைப் பற்றி பகர்வதே
பாவமெனப் பார்க்கும் பண்பாட்டில்
பாய்விரித்ததைப் பதிவுசெய்ய
பதுக்கிவைத்த பதிவுக்கருவியில்
பதிவுசெய்ததை
பலர் பார்க்கும் படக்கருவியில்
பலமுறை பலரோடு
பார்த்து பரவசமடைந்து
பரம்பொருள் பார்த்தோமே . . .

பார்த்ததை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

Monday, May 3, 2010

காதலுற்றேன்....

காதலுற்றேன்....

ஈன்றவள் ஈந்ததோ ?
இல்லை . . .
தகப்பன் தந்ததோ ?
இல்லை . . .
உறவுகள் உணர்த்தியதோ ?
இல்லை . . .
உற்றார் உரைத்ததோ ?
இல்லை . . .
நட்புகள் நவின்றதோ ?
இல்லை . . .
பால்ய வயதின் பழக்கமோ ?
இல்லை . . .
பள்ளியில் பயின்றதோ ?
இல்லை . . .
பருவ வயதில் படர்ந்ததோ ?
இல்லை . . .
பல்கலையில் படித்ததோ ?
இல்லை . . .
பல பிறப்பில் பதிந்ததோ ?
இல்லை. . .

பின் எப்போது காதலுற்றேன்..
உன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .?

உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?
இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?

எனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா ?
இல்லை . . .

உன் காதலால் காதலுற்றேனா ?
இல்லை . . .

கருவுற்றபோதே காதலுற்றேனா ?
இல்லை . . .

காதலுற்றதால் கருவானேனா ?
இல்லை . . .

. . . நான் எப்போது காதலுற்றேன் ?

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிர விஜயாப்தம் 698, முதல் மாதம் 20 ம் தேதி.


நிலாச்சாரலில் கவிதையை காண கீழே சொடுக்கவும்,


நிலவின் குளுமையோடு, நிலாச்சாரலில் நித்தம் நிலைக்கச்செய்த நிலாச்சாரல் குழுவினரக்கு நிறைந்த நன்றி,

Wednesday, April 21, 2010

சதையானவள் . . .

மதிப்பிற்குரியோரே,

மார்கண்டேயனின் மலர்ச்சோலைக்குள் நான்காவது மலராய் வந்திருப்பவர்,

'சதையானவள்',

திண்ணையில் திண்மையுடன் வீற்றிருக்கிறார் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004184&format=html),

இவரை இணையத் திண்ணையில் இருக்க இடம்கொடுத்த திண்ணையில் அமர்ந்து தமிழ்த் திறன் செய்யும் திண்ணை (www.thinnai.com) குழுவினருக்கு திவ்யமான வணக்கம்,

திண்ணையில் அமர்ந்த நாள்: ஸௌராஷ்ட்ர விஜயாப்தம் 698, முதல் மாதம், ஐந்தாம் தேதி.

சதையானவள் . . .

ஜாதி இல்லை மதமும் இல்லை,
காதல் இல்லை காமம் இல்லை,
வாலிபம் தொலைந்தது நினைவில்லை,
வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை,

. . .

இச்சையின் பிச்சை பசி போக்க,
எச்சிலால் தாகம் தீர்க்க,
வியர்வையின் வீச்சங்கள் விசிறி வீச,

. . .

குடிகெட்ட(கெடுத்த)குறிகளாலே,
குறிகளின் குறிக்கோள்களுக்கென்றே,
குமைந்து போன வாழ்க்கையில்,
சதையென்ற சவமாகி,
சதையாலே 'சமாதி' அடைந்திட்டோமே ...

மார்கண்டேயன்.

Friday, April 16, 2010

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

மார்க்கண்டேயனின் மனதில் மலர்ந்த படத்திற்கான பதிவு, ஒரு குறுங்கவிதையாக வார்க்கப்பட்டுள்ளது

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

உனக்கென்ன . . .
ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்,
அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிரா விஜயாப்தம் 698, முதல் மாதம், மூன்றாம் தேதி.


என் வரிகளை வார்ப்பில் வார்த்து, வளரச்செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழிய வாழ்த்துகள்,


மார்கண்டேயன், மதுரை, பாரதம்

Monday, February 15, 2010

என் உயிர்... (தோழி)

எம் நேசத்திற்குடையீர்,

என்னுயிர்க்கு தோழியாய், துணையாய் நின்றவளை, நிலாச் சாரலலில் நிலவின் குளுமையோடு வைத்துள்ளேன், எம்முயிரை உணர்க . . .

என் உயிர்... (தோழி)

என்னவளே . . .
என்னை எனக்கறிவித்து,
என்னுள்ளே என்னை எழுப்பி,
எனக்கேற்றம் கொடுத்து,
என்னுள் என்னை நிலைக்கச் செய்து,
என்னை எங்கும் நிறைவாக்கி,
என் நெஞ்சைப் பஞ்சாக்கி,
என் வீழ்ச்சிகளை விதைகளாக்கி,
என் வீரத்தை விவேகமாக்கி,
என் எழுத்தை கவிதையாக்கி,
என்னுயிரை உவப்பாக்கி,
என் வாழ்வை வளமாக்கிய,
என்னவளே எப்படியடி
என் எலும்பை சுக்குநூறாக்கி,
என் நெஞ்சை இரண்டாக்கி,
என்னிலிருந்த உன்னை இடம்மாற்றி,
எம்மையும் உம்மையும் உடன்பிறப்பாக்கி,
எம் நினைவை நிர்மூலமாக்கி,
எம்மைப் பேசும் ஊமையாக்கி,
எம் வாழ்வை சிதிலமாக்கி......
. . .
.....

என் கண்ணே எப்படியடி,
என்னை இன்னும் உருக்குலையாமல் வைத்திருக்கிறாய்?
என் கண்ணே எப்படியடி
எம் முன் கலைந்த நேசத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறாய்
என்னுயிர்த் தோழியே நான்
எப்பிறப்பில் செய்த தவமடி நீ?

எம்முயிரின் நினைவுகள் நிலாச்சாரலில், நீங்காமல் நிலைபெற செய்த நிலவு (நிலாச்சாரல்) குழுவினருக்கு,

நித்தம் உரைக்கின்றேன், நிலையான நன்றி,

Wednesday, October 21, 2009

நீ வருவாய்

நீ வருவாய்
நீ வருவாய் என . . .

நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்

நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்

நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்

நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்

நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன்

நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்

நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .

நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன்

நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்

என்ற என் இருப்பை உறுதி செய்ய

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .


மார்கண்டேயன்

அன்புடையீர்,

கவிதையை வாசித்தமைக்கு நன்றிகள் பல,

நான் வார்த்த வார்த்தைகளை வளம் குறையாமல் வார்த்தெடுத்து, என்னை கவிஞர்கள் வரிசையில் அமர்த்திய வார்ப்பு இணையதள குழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,

இந்த கவிதை கீழ் காணும் வலைத்தொடர்பில் உள்ளது,

http://www.vaarppu.com/view/1946