பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,
எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,
முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,
எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,
மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,
காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .
நன்றி, வார்ப்பு.
Thursday, September 23, 2010
Sunday, September 12, 2010
என்னோட ராவுகள் . . .
நெறைய மதுரக்காரங்க, மதுரைய பத்தி (முக்கியமா மதுர 'நைட்ட') எழுதுனதுல, எனக்கும் ரங்கராட்டினம் (எத்தன நாள் தான், கொசுவத்தி, சைக்கிள் சுத்துறது, மாமு கண்டுக்காதீங்க . . .) ரிவர்சுல சுத்திடுச்சு . . . நிறுத்த முடியலியே, அப்பறம் என்னாச்சுன்னா . . . இந்தப் பதிவு (கிழிஞ்சது போ ன்னு சொலறது காதுல கேக்குது) . . .
நானும் யோசிச்சு, யோசிச்சு பாக்குறேன், 'அது ஒரு கனாக்காலம்' எப்ப ஆரம்பிச்சதுன்னு சரியாத் தெரியல . . .
இருந்தாலும், 'அவளோட ராவுகள்' பார்த்து (போஸ்டரத் தான் ன்னு சொன்ன நம்பவா போறீங்க ?!!) நின்னத, வீட்ல யாரோ போட்டுக்கொடுக்க, தெனோம், ஒழுங்கா ஸ்கூலுக்கு போகும் போது வழிய மட்டும் பாத்துப்போன்னு சொல்ல ஆரம்பிச்சத . . . ஒரு வழியா காலேஜு தர்ட் இயற் படிச்சு முடிச்ச உடனே நிறுத்திட்டாங்க (அதுக்கு மேல சொல்ல முடியல, ஏன்னா . . . படிக்கிறதுக்கு வெளியில போயிட்டோம்ல)
அப்பாடா, அவளோட ராவுகள்ள இருந்து, என்னோட ராவுகள் ஞாபகத்துக்கு வந்துர்ச்சு . . .
கிட்டி புல்லு, குண்டு, பூந்தா, படமாட்டே, சைன் வெளி (பம்பரம்), அப்படி பாலரெங்கபுரத்துல போயிகிட்டிருந்த பொழுதுல, பத்தாவது படிக்கிற வரைக்கும் நைட் ஸ்டடிக்கு அவசியம் வரல (அப்பிடின்னா ஒழுங்கா படிச்சிட்டிருந்ததா . . . அர்த்தம்),
பத்தாவது லீவுல வயசுக்கு வந்து (அதாங்க, கைலி ஒரு வழியா கட்டத் தெரிஞ்சுகிட்டு . . .), அப்பவும் விடாம பூந்தா வெளையாடி, தெரு சண்டையெல்லாம் போட்டு, ஒரு வழியா . . . குவாட்டர்லி , பரிச்ச தேதி சொன்ன உடனே, படிக்கனும்ன்னு பல நாளு, சந்து முக்குல, காலியா இருக்கிற பல வீட்டு திண்ணையில . . . முடிவெடுத்து . . . மதியம் எக்ஸ்ட்ராவா தூங்கி , ஒரு நல்லா நாள்ல நைட்டு பத்து மணிக்கு மேல . . . படிக்கிறதுக்கு நாங்க எல்லாரும் வெளியில வந்துட்டோம் . . .
படிச்சோமா இல்லையான்னு தெரியாது . . . படிக்கிறது கஷ்டம்னு மட்டும் தெரிஞ்சுது . . .
சரி, நடுவுல தூக்கம் வந்துரக் கூடாதுல்ல . . . அதனால, மறக்காம டீ காசு கேட்டு வாங்கிக்குவோம் (ரெகுலரா, எது செய்றியோ இல்லையோ இத மட்டும் கரக்டா கேளுங்க்ரத கேட்டு, கேட்டு . . . மறத்துப் போச்சு . . . இருந்தா மட்டும் ரொம்பத் தான் சொரணை . . . ?!!!)
ஒரு வழியா, பதினொரு மணிக்கு, டீ சாப்புட, லோகு கட, போக ஆரம்பிச்சது . . . அப்பிடியே, முனிச்சால முக்கு, தினமணி டாக்கீஸ்ன்னு எக்ஸ்டெண்டாச்சு . . . அப்பறமென்ன . . . பருத்திப் பாலு, சில நேரம் புரோட்டா சால்னா, பிட்டு, இட்லி . . . சாப்பாடு மட்டும் கூடிக்கிட்டே போச்சு . . . கூடவே, படிக்க வேண்டிய பாடமும் . . .
எக்ஸாம் முன்னாடி, எப்டியோ பாஸ் பண்ற லெவலுக்கு தேத்திருவோம் (பிட்டத் தான்)
ஒரு வழியா காலேஜு வந்த ஒடன, புது குரூப்பு, இப்ப கொஞ்சம் தைரியம் வந்துருச்சு . . .
தினமணி டாக்கீஸ் வரைக்கும் இருந்தது . . . டைரக்சன் மாறி, மிசன் ஹாஸ்பிடல், அப்படியே, பழைய மாகாளிப் பட்டி ரோட்டுக்கு எதுத்தாப்புல இருக்கிற அண்டர் கிரவுண்டு கடன்னு . . . ஏன்னா, சமூகத்துல சில பேரு, பொக போட்டு கொசுவ வெரட்டுற அரும்பணிய கையில எடுத்திருந்தாங்க . . . அவங்க பாதுகாப்பு கருதி அண்டர் கிரவுண்டு தான் இனிமேன்னு பஞ்சாயத்து பைசலாச்சு . . . ஆனா யாரையும், கம்பெல் பண்ண மாட்டோம்,
ஒரே ஒரு வார்த்த சொல்லுவோம்,
"மாமு, உன்னைய தம்மடிக்க கூப்ட்டா தப்பு, வர்றதுக்கு என்னடா ? கேடு . . . இந்த மயித்துக்கு நீ வீட்லயே படிச்சிர்க்கலாம்ல . . . ",
அதுக்கப்பறமும், வரலன்னா, அவேன் மதுரக்காரனே கெடையாது . . . !!!
இப்பிடியே, படிச்சு (??!!!), காலையில ரெகுலர், அன்னைக்கு மதியமே ஒரு அரியர், அதுக்கு அடுத்த நாள் காலையிலேயே, ஒரு ரெகுலர்ன்னு எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல . . .
அப்பறம், அந்தக் கும்பல்லயும், கும்மி அடிக்காம, படிச்சவங்க மேல படிக்கப் போக, எனக்கும் கலைவாணி அருள் கெடைக்க, நானும் மேல படிக்க (?!!!) கெளம்பிட்டேன் . . .
என்னைக்காவது ஊருக்கு வரும் போது எப்பவாவது, நைட்டு பத்து மணிக்கு மேல பட்டரைய போட்டோம்ன்னா . . .
பஸ் ஸ்டாண்டு, அங்க இங்கன்னு சுத்தி, வீடு வந்து சேரம் போது . . . காலையில மணி அஞ்சாயிர்க்கும் . . .
தூக்கத்துலயும் . . . கரக்ட்டா சொல்வாங்க . . . அப்படியே ரயில்வே ஸ்டேஷன்லயோ, பிளாட்பார்ம்லையோ செட்டில் ஆயிட்டீன்னா . . . சாப்பாடு, தங்குறது எல்லாமே மிச்சம்னு . . . வழக்கம் போல பேசாம போயி படுத்துற வேண்டியது தான் . . .
இப்படியே, ஒரு பத்து, பன்னெண்டு வருஷம் 'என்னோட ராவுகள்' இருந்துர்க்கு . . .
இன்னைக்கு, மதுரையே மாறிடுச்சுன்னு மதுரை சரவணன் எழுதி இருக்கிறதப் பாக்கும் போது . . . மேல சொன்னதெல்லாம் நெசந்தானான்னு தோணுது . . .
இதுக்கு தான் மாப்ள, நம்ம எல்லாம் ஊர்லையே இருந்துர்க்கனும் . . .
என்ன செய்ய எல்லாம் நேரப் ... ட ... ?
நானும் யோசிச்சு, யோசிச்சு பாக்குறேன், 'அது ஒரு கனாக்காலம்' எப்ப ஆரம்பிச்சதுன்னு சரியாத் தெரியல . . .
இருந்தாலும், 'அவளோட ராவுகள்' பார்த்து (போஸ்டரத் தான் ன்னு சொன்ன நம்பவா போறீங்க ?!!) நின்னத, வீட்ல யாரோ போட்டுக்கொடுக்க, தெனோம், ஒழுங்கா ஸ்கூலுக்கு போகும் போது வழிய மட்டும் பாத்துப்போன்னு சொல்ல ஆரம்பிச்சத . . . ஒரு வழியா காலேஜு தர்ட் இயற் படிச்சு முடிச்ச உடனே நிறுத்திட்டாங்க (அதுக்கு மேல சொல்ல முடியல, ஏன்னா . . . படிக்கிறதுக்கு வெளியில போயிட்டோம்ல)
அப்பாடா, அவளோட ராவுகள்ள இருந்து, என்னோட ராவுகள் ஞாபகத்துக்கு வந்துர்ச்சு . . .
கிட்டி புல்லு, குண்டு, பூந்தா, படமாட்டே, சைன் வெளி (பம்பரம்), அப்படி பாலரெங்கபுரத்துல போயிகிட்டிருந்த பொழுதுல, பத்தாவது படிக்கிற வரைக்கும் நைட் ஸ்டடிக்கு அவசியம் வரல (அப்பிடின்னா ஒழுங்கா படிச்சிட்டிருந்ததா . . . அர்த்தம்),
பத்தாவது லீவுல வயசுக்கு வந்து (அதாங்க, கைலி ஒரு வழியா கட்டத் தெரிஞ்சுகிட்டு . . .), அப்பவும் விடாம பூந்தா வெளையாடி, தெரு சண்டையெல்லாம் போட்டு, ஒரு வழியா . . . குவாட்டர்லி , பரிச்ச தேதி சொன்ன உடனே, படிக்கனும்ன்னு பல நாளு, சந்து முக்குல, காலியா இருக்கிற பல வீட்டு திண்ணையில . . . முடிவெடுத்து . . . மதியம் எக்ஸ்ட்ராவா தூங்கி , ஒரு நல்லா நாள்ல நைட்டு பத்து மணிக்கு மேல . . . படிக்கிறதுக்கு நாங்க எல்லாரும் வெளியில வந்துட்டோம் . . .
படிச்சோமா இல்லையான்னு தெரியாது . . . படிக்கிறது கஷ்டம்னு மட்டும் தெரிஞ்சுது . . .
சரி, நடுவுல தூக்கம் வந்துரக் கூடாதுல்ல . . . அதனால, மறக்காம டீ காசு கேட்டு வாங்கிக்குவோம் (ரெகுலரா, எது செய்றியோ இல்லையோ இத மட்டும் கரக்டா கேளுங்க்ரத கேட்டு, கேட்டு . . . மறத்துப் போச்சு . . . இருந்தா மட்டும் ரொம்பத் தான் சொரணை . . . ?!!!)
ஒரு வழியா, பதினொரு மணிக்கு, டீ சாப்புட, லோகு கட, போக ஆரம்பிச்சது . . . அப்பிடியே, முனிச்சால முக்கு, தினமணி டாக்கீஸ்ன்னு எக்ஸ்டெண்டாச்சு . . . அப்பறமென்ன . . . பருத்திப் பாலு, சில நேரம் புரோட்டா சால்னா, பிட்டு, இட்லி . . . சாப்பாடு மட்டும் கூடிக்கிட்டே போச்சு . . . கூடவே, படிக்க வேண்டிய பாடமும் . . .
எக்ஸாம் முன்னாடி, எப்டியோ பாஸ் பண்ற லெவலுக்கு தேத்திருவோம் (பிட்டத் தான்)
ஒரு வழியா காலேஜு வந்த ஒடன, புது குரூப்பு, இப்ப கொஞ்சம் தைரியம் வந்துருச்சு . . .
தினமணி டாக்கீஸ் வரைக்கும் இருந்தது . . . டைரக்சன் மாறி, மிசன் ஹாஸ்பிடல், அப்படியே, பழைய மாகாளிப் பட்டி ரோட்டுக்கு எதுத்தாப்புல இருக்கிற அண்டர் கிரவுண்டு கடன்னு . . . ஏன்னா, சமூகத்துல சில பேரு, பொக போட்டு கொசுவ வெரட்டுற அரும்பணிய கையில எடுத்திருந்தாங்க . . . அவங்க பாதுகாப்பு கருதி அண்டர் கிரவுண்டு தான் இனிமேன்னு பஞ்சாயத்து பைசலாச்சு . . . ஆனா யாரையும், கம்பெல் பண்ண மாட்டோம்,
ஒரே ஒரு வார்த்த சொல்லுவோம்,
"மாமு, உன்னைய தம்மடிக்க கூப்ட்டா தப்பு, வர்றதுக்கு என்னடா ? கேடு . . . இந்த மயித்துக்கு நீ வீட்லயே படிச்சிர்க்கலாம்ல . . . ",
அதுக்கப்பறமும், வரலன்னா, அவேன் மதுரக்காரனே கெடையாது . . . !!!
இப்பிடியே, படிச்சு (??!!!), காலையில ரெகுலர், அன்னைக்கு மதியமே ஒரு அரியர், அதுக்கு அடுத்த நாள் காலையிலேயே, ஒரு ரெகுலர்ன்னு எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல . . .
அப்பறம், அந்தக் கும்பல்லயும், கும்மி அடிக்காம, படிச்சவங்க மேல படிக்கப் போக, எனக்கும் கலைவாணி அருள் கெடைக்க, நானும் மேல படிக்க (?!!!) கெளம்பிட்டேன் . . .
என்னைக்காவது ஊருக்கு வரும் போது எப்பவாவது, நைட்டு பத்து மணிக்கு மேல பட்டரைய போட்டோம்ன்னா . . .
பஸ் ஸ்டாண்டு, அங்க இங்கன்னு சுத்தி, வீடு வந்து சேரம் போது . . . காலையில மணி அஞ்சாயிர்க்கும் . . .
தூக்கத்துலயும் . . . கரக்ட்டா சொல்வாங்க . . . அப்படியே ரயில்வே ஸ்டேஷன்லயோ, பிளாட்பார்ம்லையோ செட்டில் ஆயிட்டீன்னா . . . சாப்பாடு, தங்குறது எல்லாமே மிச்சம்னு . . . வழக்கம் போல பேசாம போயி படுத்துற வேண்டியது தான் . . .
இப்படியே, ஒரு பத்து, பன்னெண்டு வருஷம் 'என்னோட ராவுகள்' இருந்துர்க்கு . . .
இன்னைக்கு, மதுரையே மாறிடுச்சுன்னு மதுரை சரவணன் எழுதி இருக்கிறதப் பாக்கும் போது . . . மேல சொன்னதெல்லாம் நெசந்தானான்னு தோணுது . . .
இதுக்கு தான் மாப்ள, நம்ம எல்லாம் ஊர்லையே இருந்துர்க்கனும் . . .
என்ன செய்ய எல்லாம் நேரப் ... ட ... ?
Subscribe to:
Posts (Atom)