மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Monday, May 31, 2010

என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகள்

சுயம் தேடும் பறவையாக . . .
என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகளிலிரிந்து
எப்பொழுதாவது என்னை மீட்டெடுக்கிறேன்
மீட்டெடுக்கும் தருணங்களில் . . .
மீதமுள்ள வாழ்க்கையின்
வாக்கியங்கள்
நிகழ்கால நிஜங்களால்
முற்றுப்பெறாமல்...
நீரோடையில் மிதக்கும் தக்கையாக . . .

நன்றி., வார்ப்பு இணைய இதழுக்கு.

Friday, May 28, 2010

பரம்பொருள் பார்த்தோமே

பாய்விரிப்பதைப் பற்றி பகர்வதே
பாவமெனப் பார்க்கும் பண்பாட்டில்
பாய்விரித்ததைப் பதிவுசெய்ய
பதுக்கிவைத்த பதிவுக்கருவியில்
பதிவுசெய்ததை
பலர் பார்க்கும் படக்கருவியில்
பலமுறை பலரோடு
பார்த்து பரவசமடைந்து
பரம்பொருள் பார்த்தோமே . . .

பார்த்ததை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

Monday, May 3, 2010

காதலுற்றேன்....

காதலுற்றேன்....

ஈன்றவள் ஈந்ததோ ?
இல்லை . . .
தகப்பன் தந்ததோ ?
இல்லை . . .
உறவுகள் உணர்த்தியதோ ?
இல்லை . . .
உற்றார் உரைத்ததோ ?
இல்லை . . .
நட்புகள் நவின்றதோ ?
இல்லை . . .
பால்ய வயதின் பழக்கமோ ?
இல்லை . . .
பள்ளியில் பயின்றதோ ?
இல்லை . . .
பருவ வயதில் படர்ந்ததோ ?
இல்லை . . .
பல்கலையில் படித்ததோ ?
இல்லை . . .
பல பிறப்பில் பதிந்ததோ ?
இல்லை. . .

பின் எப்போது காதலுற்றேன்..
உன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .?

உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?
இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?

எனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா ?
இல்லை . . .

உன் காதலால் காதலுற்றேனா ?
இல்லை . . .

கருவுற்றபோதே காதலுற்றேனா ?
இல்லை . . .

காதலுற்றதால் கருவானேனா ?
இல்லை . . .

. . . நான் எப்போது காதலுற்றேன் ?

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிர விஜயாப்தம் 698, முதல் மாதம் 20 ம் தேதி.


நிலாச்சாரலில் கவிதையை காண கீழே சொடுக்கவும்,


நிலவின் குளுமையோடு, நிலாச்சாரலில் நித்தம் நிலைக்கச்செய்த நிலாச்சாரல் குழுவினரக்கு நிறைந்த நன்றி,